லேவியர் 24, 25 & 26

மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார். விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும். தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும். முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்: இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும்.

விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்: மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும். அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

லேவியர் 24:17-22

சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும். அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட: உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும். அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே: உணவை அதிக விலைக்கு விற்காதே.

லேவியர் 25:35-37

நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

லேவியர் 26:1